Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் மையவாடி, காணியை பிடிக்க தமிழர்கள் சதி

-அப்துல் காதர்-

யாழ்ப்பாண முஸ்லிம்கள் இறந்தவர்களின் உடலை அடக்க கடந்த 8 நூற்றாண்டுகளாக பாவித்து வந்த மையவாடி காணியை அபகரிக்கும் நோக்கோடு சில தமிழர்கள் செயற்பட்டு வருவது கவலையளிக்கின்றது. ஆம் யாழ் சிவன் பண்ணை வீதியில்  வைத்தியசாலை வீதி ஊடறுத்துச் செல்லும் கோணரில் அமைந்துள்ள காணி தான் இந்த மையவாடிக் காணியாகும். 

13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்த காணி மையவாடியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக போர்த்துக் கீசர் மற்றும் ஒல்லாந்தரின் குறிப்புகளில் காணப்படுகின்றன. 1516 இல் கோட்டைப் பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் பின்வாங்கியதை அடுத்து சில மாதங்கள் அக்காணி உபயோகப்படுத்தப்படவில்லை. பிறகு போர்த்துக்கீசருடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின் பிறகாரம் மீண்டும் இறந்த முஸ்லிம்களின் உடல்கள் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டுவரை யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட மூன்று மையவாடிகளில் இந்த மையவாடியே முதல் மையவாடி என யாழ்ப்பாண வெற்றி என்ற போர்த்துக்கீச நூல் கூறுகின்றது. 

பின்னர் 1990 ஒக்ரோபர் வரை இந்தக் காணியில் மையத்துகள் அடக்கப்பட்டன. தற்போது யாழ் சம்பாண் தெரு, மெயின் வீதி போன்ற இடங்களில்  வாழும் முஸ்லிம்களில் இறந்தவர்கள் இங்கு அடக்கப்படுகின்றனர். வெளியூர் முஸ்லிம்கள் வைத்தியசாலையில் மரணிக்குமிடத்து அவர்களும் இங்கு அடக்கப்படுகின்றனர். 

இது இவ்வாறு இருக்க சிவன் பண்ணை வீதியில் மையவாடிக்கு 2 அடி வீதியை நோக்கிய இடத்தில் கடவுளின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 

1516 இல் போர்த்துக்கீசர் அழித்த இந்துக் கோவில் முஸ்லிம்களின் மையவாடியில் அமைய வேண்டுமென்று நோக்கில் தான்  அக்கால இந்துக்கள் கொடுஞ்செயலைச் செய்தனர். தற்போதும் அதே பாணியில் மிகவும் கீழ்த்தரமான வேலையை கொட்டடி வாழ் இந்துக்கள் செய்கின்றனர். இவர்கள் நல்லூரில் வாழ்ந்த இந்திய வழி வந்த இந்துக்களின் வாரிசுகளாவர். 

இது சம்பந்தமாக யாழ் அரச அதிபருக்கு அறிவிக்கப்பட்டும் கடந்த பல மாதங்களாக எவ்வித நடவடிக்கையும் மேறகொள்ளப்படவில்லை. இந்துக்கடவுளுக்கு சிலை அமைக்க முஸ்லிம்களின் பிணவாடிதான் கிடைத்ததா? கடவுளுக்கு மயானத்தை விட்டால் வேறு இடத்தில் குடிகொள்ள முடியாதா? பிணத்தின் மேல் முளைக்கும் கடவுள் உண்மையான கடவுளாக இருப்பாரா? இப்படி பல கேள்விகளுடன் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை உருவாக்கும் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்கின்றன. 

2 comments:

  1. இனவாத புலிகளின் அறிச்சுவடில் வந்த ஒரு கும்பலின் சதித்திட்டமே தவிர ஒற்றுமொத்த இந்துக்களும்மல்ல.

    ReplyDelete
  2. தமிழ் தீவிரவாதிகளின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு இது. புலி தீவிரவாதிகள் இருந்த காலத்தையொத்த இந்த நிகழ்வை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது முஸ்லிம்கள் ஒரு போதும் இந்த நாட்டின் ஒரு சிறுபான்மை தீவிரவாதிகளிடம் மண்டியிட முடியாது

    ReplyDelete

Powered by Blogger.