மாணிக்க வர்த்தகர் வீட்டில் கொள்ளை - இவர்தான் தேடப்படுபவர்..!
-எம்.எல்.எஸ்.முஹம்மத்-
இரத்தினபுரி படுகெதர அரபுக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள பிரபல மாணிக்க வர்த்தகர் ஹிஸ்மத் அவர்களின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் ஒருவரின் படமொன்று இன்று வெளியாகியுள்ளது.
இரத்தினபுரி பொலிஸார் இவரை தேடி வருகின்றனர் .மேற்படி சந்தேக நபர் தொடர்பாக தகவல்கள் அறிந்தோர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு ஹிஸ்மத் பொது மக்களிடம் வேண்டிக்கொண்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது குறித்த மாணிக்க வர்த்தகரின் வீட்டிலிருந்து மிகப் பெறுமதியான மாணிக்கக் கற்கள் உட்பட்ட பெருந்தொகையான பணம் மற்றும் நகைளும் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும் .
Post a Comment