Header Ads



மஹிந்தவின் இளைய சகோதரி மரணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தங்கையான காந்தினி சித்ராணி ராஜபக்ஸ ரணவக்க திடீரென மரணமடைந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று -08- காலை உயிரிழந்துள்ளார்.

இவர் தனது 60ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

இவரது பூதவுடல் நுகேகொட - எம்புல்தெனிய பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவரின் இறுதிக் கிரியை நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ஸ குடும்பத்தில் காந்தினி சித்ராணி ராஜபக்ஸ ரணவக்க இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.