Header Ads



ஞானசாரரைத் தேடி முற்றுகையிடப்பட்டுள்ள ரோயல் பார்க்,

கொழும்புக்கு அண்மித்த ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி தற்போது பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு, ஞானசார தேரரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்படவிருந்த ஞானசார தேரர் சுகவீனம் என்று கூறி நேற்றைய தினம் நீதிமன்றத்தில் சமூகமளிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்திருப்பதாகவும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று முன்னிரவில் பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே ஞானசார தேரரின் மொபைல் போனை எடுத்துக் கொண்டு ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதிக்கு வந்துள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து வந்த பொலிசார் தற்போது குறித்த குடியிருப்புத் தொகுதியை முற்றுகையிட்டு விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

1 comment:

  1. அவரை தேரர் என்று செய்திகளில் பிரசுரித்து ஏனைய மனித நேயமுள்ள தேரர்களின் உள்ளங்களை புணபடுத்தாமல் இருப்போம்

    ReplyDelete

Powered by Blogger.