Header Ads



ஞானசாரருக்கு ஆதரவாக அணிதிரள, சிங்கலே அழைப்பு

பொலிசாரினால் கைது செய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ள ஞானசார தேரருக்கு ஆதரவாக பிக்குகள் அணிதிரள வேண்டுமென்று சிங்கலே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரரைக்கைது செய்வதற்கு பொலிசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஞானசார தேரரின் தேசிய மகத்துவமிக்க பணிகளுக்கு நன்றியறிதல்களையும், ஆதரவையும் தெரிவிக்கும் வகையில் மகாசங்கத்தினர் (பிக்குகள்) அணிதிரள வேண்டுமென்று சிங்கலே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்காக 26ம் திகதி வெள்ளிக்கிழமை காலை பத்து மணியளவில் மகாசங்கத்தினர் ராஜகிரிய, நாவல வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சத்தர்மராஜிக விகாரைக்கு வருகை தருமாறும் சிங்கலே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

2 comments:

  1. இவன நேற்று இரவு கைது செய்யவில்லையா?

    ReplyDelete
  2. நீ பிர்அவ்னா?????அல்லது அபூ ஜஹ்லா???

    ReplyDelete

Powered by Blogger.