Header Ads



இரத்தினபுரி முஸ்லிம்களுக்கான உதவிகள் சென்றடைவு

-எம்.எல்.எஸ்.முஹம்மத்-

இரத்தினபுரியில் வெள்ள அனர்தங்களால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி முஸ்லீங்களுக்கான மனித வள உதவிகள் தொடர்பாக முஸ்லிம் சமூக வலை தளங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட " இரத்தினபுரி முஸ்லீங்களை மறந்து ஏன்"? என்ற செய்தியைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் பல பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சமய நிறுவனங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன .இப்பணியில் பாலாங்கொடை அரபுக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பிரதேச வாசிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இப்பொதுப் பணியில் இரத்தினபுரி ஜென்னத் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் , இரத்தினபுரி ஆலிம்கள் ,இரத்தினபுரி சல்சபீல் நிறுவனம் மற்றும் இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னனிகள் சம்மேளனம் உட்பட தனிநபர்கள் பலரும் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந் நற்பணிக்கு காரணமாக அமைந்த முஸ்லிம் சமூக வலை தளங்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரத்தினபுரி முஸ்லீங்கள் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கின்றனர் .

2 comments:

  1. அகில இலங்கை ஜ.உலமா கொள்ளுப்பிட்டி பள்ளி மூலம் இரத்தினபுரி மக்களுக்காக நிவாரணங்கள் சில தினங்களில் வழங்கப்படும்
    இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.