Header Ads



வெள்ளிக்கிழமை நாடு முடக்கப்படுமா..?

மாலபே சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற் சங்கங்கள்  ஒன்றிணைந்து 5ஆம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில்  ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளடங்கலாக சுகாதார தொழிற்சங்கங்கள் பல இணைந்துகொள்ளவுள்ளதுடன் ஆசிரியர், போக்குவரத்து, பொதுச்சேவைகள் உள்ளிட்ட 160 வரையான தொழிற்சங்கள் இணைந்துகொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.