Header Ads



றிசாத் பதியுதீன், ஆசாத் சாலியை கைதுசெய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


சிறுபான்மை அரசியல்வாதிகளான அசாத் சாலி, சிவாஜிலிங்கம், ரிசாத் பதியுதீன் ஆகியோரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி சிங்களவர்கள் குழுவொன்று பேரணியொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுபல சேனா அமைப்புக்கு ஆதரவான அமைப்புகளின் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட இந்தப் பேரணி, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் எதிரில் இன்று மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்தவர்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுவரும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், ஞானசார தேரருக்கு எதிராக கருத்து வெளியிடும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, வில்பத்து விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோரைக் கைது செய்யுமாறு வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

முஸ்லிம் இனவாதிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஞானசார தேரரைக் கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர்கள், அதற்கு முன்னதாக இனவாத அரசியல் மேற்கொண்டுவரும் சிவாஜிலிங்கம், அசாத் சாலி, ரிசாத் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

1 comment:

  1. Now the world knows who is racist from their hate speeches (recorded), Aluthgama incident, burning of shops, attacks on Masjids, churches and so on.

    ReplyDelete

Powered by Blogger.