முஸ்லிம் அமைச்சர்கள், என்ன செய்ய போகின்றனர்...? சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நோன்பு நோற்கும் மக்களின் ஊடாக வருமானத்தை ஈட்டவே அரசாங்கம் முயற்சிக்கிறது. எனவே இது தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்ய போகின்றனர்? அவர்கள் பதில் வழங்குவார்களா என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத்தில் விசேட வியாபார பண்ட அறவீட்டு சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
முஸ்லிம்களின் நோன்பு மாதம் வருவதனை அறிந்து அரசாங்கம் பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்துள்ளது. விசேட வியாபார பண்ட அறவீடு மூலம் பேரீச்சம்பழத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், உருளைக் கிழங்கு இறக்குமதி உணவு வகையில் அதிகரிப்பதன் ஊடாக பயிர்செய்கையாளர்கள் இலாபம் பெறுவார்கள் என கூறமுடியும். எனினும் பேரீச்சம்பழ வரி அதிகரிக்கப்படுகின்றது என்றால் இங்கே பேரீச்சம்பழம் பயிரிடப்படுகின்றதா? பேரீச்சம்பழ பயிர்செய்கையாளர்கள் இலங்கையில் உள்ளனரா? இல்லை; நோன்பாளிகளை வைத்து அரசாங்கம் தனக்கு இலாபம் ஈட்டவே முயற்சிக்கிறது. இது பெரும் அநியாயமாகும்.
எனவே இது தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப்போகின்றனர்? பெரிதாக தம்மை முஸ்லிம் தலைவர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் என்ன பதில் வழங்க போகின்றனர்?
அத்துடன் சீனாவுடன் இம்மாதம் சுதந்திர வர்த்தக ஒப்பந்ததை அரசாங்கம் கைச்சாத்திடவுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர். சீனர்கள் இலங்கை வந்தால் பீல்ட் மார்ஷலினால் கூட ஒன்றும் செய்ய முடியாது. தற்போது சீனர்கள் அமெரிக்காவை கூட ஆக்கிரமித்துள்ளனர். எனவே பெரிய சந்தையை கொண்ட நாட்டுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என கேள்வி எழுப்பினார்.
VERY GOOD EXPLANATION AND QUESTION
ReplyDeleteவாய் மூடி மவுனமாக இருந்தாள் அரசாங்கம் இவர்களுக்கு commission கெடுக்கும். மானம் கெட்ட நாதாரிகள் இவர்கள்
ReplyDeleteReasonable questions.
ReplyDeleteஐயோ பாவம்,
ReplyDeleteசும்மா சும்மா ஏங்கட தலைவர்களை குறை கூற வாணாம்.
நீங்க சொன்னத்துக்கப்புறம் தான் அவங்களுக்கே இந்த விஷயம் தெரிய வந்திருக்கும்.
இனிதான் அவங்க வியூகம் வகுப்பங்க, இத வெச்சி எப்படி அரசியல் இலாபம் அடையிறதெண்டு??
so, கொஞ்சம் பொறுமையா இருங்கோ அவங்க நல்லதொரு தீர்மானத்துக்கு வருவாங்க.
Mr. அப்துல் , நீங்கள் மிக சரியாக சொன்னீர்கள். இது எங்ககட மாடுகளுக்கு கணக்கே இல்லே. இதைப்பற்றி பேசினால் ஏனைய வரப்பிரசாதங்களை அடைய முடியாதல்லவா.
ReplyDeleteWhere is Mr. Risad Bathiudeen. Did he instruct this price increase. Another Minister is trying to increase the water tariff. He is a nice guy helping government to make some bucks..
ReplyDeleteRishad Bathideen will tell that we have got good quality of dates from Saudi Arabia; that is the reason for price increase.
ReplyDeleteஇந்நாட்டில் நோன்பு பிடித்துக் கேட்ட துஆக்கள் - பிரார்த்தனைகள் அரசியல் மற்றும் யுத்த விதிகளை மிகத் தெளிவாக மாற்றியமைத்து இருக்கின்றன.
ReplyDeleteஅதிலும், நோன்பு திறப்பதற்குப் பயன்படுத்தும் பேரீச்சம்பழத்தின் விலையை, நோன்பாளிகளுக்குப் பாதகமாக அனாவசியமாக அதிகரித்தால் அதற்கான சரியான விலையை அரசாங்கம் கொடுக்க வேண்டிவரும்.
காரணம் அவை பெறுமதி கூடிய பிரார்த்தனைகள்.