Header Ads



மாணிக்க வர்த்தகர் ஹிஸ்மத் வீட்டில், பாரிய கொள்ளைச் சம்பவம்

இரத்தினபுரி படுகெதர அரபுக் கல்லூரி வீதியில் வசிக்கும் மாணிக்க வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இன்று (01) பகல் நேரத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

.இதன் போது வீட்டில் இருந்த பெறுமதியான மாணிக்கக் கற்கள் மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.வீட்டி ல் எவரும் இல்லாதபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணிக்க வியாபாரிகளிடம் அறிமுகம் அற்ற முறையில் மாணிக்கக் கற்கள் கொண்டுவரப்பட்டால் அது தொடர்பாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு குறிப்பிட்ட முஸ்லிம் வர்த்தகர் ஹிஸ்மத்  வேண்டிக் கொண்டுள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

No comments

Powered by Blogger.