ரணிலுக்கே இந்த நிலையா..?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதுளைக்கு விஜயம் செய்திருந்தபோது, வேண்டுமென்றே, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.தே.கவின் பதுளை மாவட்ட அங்கத்தவர்களுக்கான கூட்டம், பதுளை நகரிலுள்ள ஒனிக்ஸ் ஹோட்டலில், சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டரின் மூலம், பதுளை நகருக்கு வந்திருந்தார். இவர், பதுளை நகருக்கு வந்தபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பிரதமர் மீண்டும் ஹெலிகொப்டரில் தலைநருக்கு திரும்பும்வரை சுமார் மூன்று மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டே இருந்ததாக ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டரில் ஏறியப் பின்னர் 10 வினாடிகளுக்குள் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பிவிட்டதாகவும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்றும் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மேலும் கூறினர் -
Post a Comment