Header Ads



ஹிஸ்புல்லாவின் ஆத்திரம்..!

முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்று(06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்கள் பாரிய துயரங்களை அனுபவித்தனர். ஆயிரக்கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்தனர். கடந்த ஆட்சிக்காலத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய இணைந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டு இன்று நாங்கள் நிம்மதியாக தலைநிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்நிலையில், இனப்பிரச்சினைக்கு தீர்வாக மீண்டும் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடி வருகின்றது. இக்கோரிக்கையை நிறைவேற்றுமாறு சர்வதேசத்தின் ஆதரவோடு டயஸ்போரா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது.

பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லிவைக்க விரும்புகின்றோம். முஸ்லிம்களுக்கு என்று தென்கிழக்கு அலகு வேண்டும் என்ற கோரிக்கையை வென்றெடுப்பதற்காகவே நாங்கள் அரசியலுக்கு வந்தோம். 1988 ஆம் ஆண்டு முதலாவது மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிட்ட போது, மறைந்த அஷ்ரப் தலைமையில் நாங்கள் போகும் இடமெல்லாம் “இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு என தனி மாகாணம் உருவாக்கப்பட வேண்டும், அதனை வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்" என்றே குறிப்பிட்டோம். அன்று முதல் இன்று வரை அதற்கான போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கிறோம்.

இவ்வாறான நிலையில், முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு இருக்கக்கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும்" என்று முஸ்லிம் வாக்குளைப் பெற்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றே கட்சி நடத்துகின்றது. அதன் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முஸ்லிம்களுக்கு தனிமாகாணம் வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என அறிக்கையொன்றினை விட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

குறித்த அறிக்கையில், 'வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் அது இயற்கையானது. அது எக்காலத்திலும் பிரியக் கூடாது. வடக்கும், கிழக்கும் பாதுகாக்க வேண்டுமாக இருந்தால், வடகிழக்கு இணைந்திருக்க வேண்டும்" என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் குறிப்பிடுவது போன்று, வடக்கு கிழக்கு இணைய வேண்டும் அது இயற்கையானது என்றால் அதற்கான நியாயமான காரணம் ஒன்றை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்வைக்க வேண்டும்.

வரலாற்றில் வடகிழக்கு எப்போதும் இணைந்திருக்கவில்லை. முஸ்லிம்களுக்கு என பேசுவதற்கு பலமான சக்தியொன்று இல்லாத நிலையில் பலாத்காரமாக இந்தியாவைக் கொண்டு இரவோடு இரவாக ஜே.ஆர். ஜெயவர்தனவும், ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமையவே வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. இணைந்த வடகிழக்கில் நாங்கள் சொல்லன்னா துயரங்களை அனுபவித்தோம். ஆயிரக்கணக்கான உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்தோம். அத்துடன், இரத்தம் சிந்தி, பள்ளிவாசல்களில் நூற்றுக்கணக்கானவர்களை சுஹதாக்கலாக்கிய கொடிய சம்பங்களை அடுத்தே வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டது.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இன்று நாங்கள் நிம்மதியாக தனித்துவமான வாழ்ந்து வருகின்றோம். அரசியல் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம். மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் உள்ளார். மாகாண முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம்களுக்கு இவ்வாறான அதிகாரங்கள் இருக்கின்றன. ஏனைய 8 மாகாணங்களில் முஸ்லிம் மாகாண அமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்வதே சாத்தியமற்ற ஒன்றாகவுள்ளது. இவ்வாறு, கிழக்கில் அதிகாரத்துடன் தனித்துவமாக வாழும் முஸ்லிம்களை, வடகிழக்கு இணைப்பின் ஊடாக சிறுபான்மையினராக்கி அடிமைப்படுத்த வைப்பதா நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் எதிர்பார்ப்பு.

இவர்களுக்கு ஆதரவளிக்கின்ற ஒவ்வொரு முஸ்லிம் சகோதரர்களும், வாக்களித்தவர்களும் சற்று சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சக்திகளை இந்த மண்ணிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறான சக்திகள் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதை தவிர்ந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால், இந்த சமூகத்தின் வாக்குகளைப் பெற்று சமூகத்துக்கு எதிராக செயற்படும் துரோகிகள் இவர்கள்.

நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும். அதன் ஊடகாவே எமது சமூகத்தின் பாதுகாப்பு தங்கியுள்ளது. அரசாங்கங்களை மாற்றுவதன் ஊடாக மாத்திரம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. நாங்கள் ஒன்றுபட்டு அதிகாரமுள்ள சமூகமாக செயற்பட்டால் மாத்திரமே நாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. எங்கள் நிலங்களில் ஒரு அடியேனும் தமிழ் தீவிரவாத தேசத்திற்கு போகக்கூடாது அரசியல்வாஆதிகள் நீங்கள் உறுதியாக இருந்தால் நாம் உங்களுக்கு பின்னால் இருக்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. டே பறதேசி உலக நாடுகளுக்கே தெறியும் முஸ்லிம்கள்தான் தீவிரவாதி என்டு. கிழக்குல முஸ்லிமவிட தமிழன்தான் 40000 மக்கள் கூட இருக்கு அடுத்த முதலமைச்சர் நான்கான் Ok போனதறம் தமிழ்தேசியகூட்டமைப்பு விட்டுகொடுத்த முதலமைச்சர் பதவி

      Delete
  2. எங்கே அடுத்தமுறை தனித்து நின்று முடிந்தால் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளுங்கள் தமிழ் தீவிரவாதிகளே !!!. நீர் ஏன் உலகம் வரை போறாய் இலங்கையில் நாம் பார்த்த தீவிரவாத பன்றிகள் உங்கள் கூட்டம் தானே .. நீங்கள் செய்ததின் விளைவு தானே விடுதலை பன்றி கூட்டம் புதைக்க உடல் கூட இல்லாமல் தொலைந்து போனது. இப்போ என்ன புதிய கதை கூறுகிறாய் ? கிழக்கு கிழக்கு தான் வடக்கு வடக்கு தான் நீங்கள் நினைத்தபடி ஆட இது கனவு ஈழ தேசம் இல்லை ஒன்றிணைந்த உண்மையான இலங்கை தேசம்

    ReplyDelete
    Replies
    1. முதலமைச்சர் பதைவி நான்க போட்ட பிச்ச ப்ப இருக்கிற முதலமைச்சர் பொம்மைக்கு சமன் ஏன் என்டா மாகாண சபைக்குள நான்க இருன்து ஆட்டி படைக்கம்

      Delete
    2. நல்லா ஆட்டி படைங்க :D ஒன்றுக்கும் உதவாத ஈழம், சமஷ்டி புடலங்காய் எண்டு அப்போதிலிருந்து இப்போ வரை வெட்டி வியாக்கியானம் பேசி பேசி உன் இனத்தில் பாதி பேரை அழிச்சாச்சு இப்போ என்ன புதுசா ஆட்டி படைக்கிறீங்க

      Delete

Powered by Blogger.