Header Ads



மொரட்டுவ பல்கலைக்கழக மாணவியின், சடலம் குளியலறையிலிருந்து மீட்பு

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கல்வி கற்றுவரும் மாணவியின் சடலம், நேற்றைய தினம் பிலியந்தல மதபத்த பகுதியில் அமைந்துள்ள அவரின், வீட்டில் உள்ள குளியலறையிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் கணவரே சடலத்தை நேற்றைய தினம் மீட்டுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.