Header Ads



முஸ்­லிம்­க­ளுக்கும், இஸ்­லாத்­துக்கும் எதி­ரான பேச்­சு­களை ஞானசாரா நிறுத்தவேண்டும்.

-விடிவெள்ளி-

பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ரான தனது வெறுப்புப் பேச்­சு­களை நிறுத்திக் கொள்ள வேண்டும். பௌத்த மத குரு­வான அவர் நாட்டை இரத்தக் கள­ரியாக மாற்ற ஒரு போதும் முனையக் கூடாது என ஜாதிக பல­சே­னாவின் செய­லாளர் வட்­ட­ரக்க விஜித தேரர் தெரி­வித்­துள்ளார்.

நாட்டில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் தொட­ராக தாக்­கப்­பட்டு எரிக்­கப்­பட்டு வரும் சம்­ப­வங்கள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

முஸ்லிம் அமைச்­சர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அசாத்­சா­லியும் கூறு­வது போன்று பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேரரைக் கைது செய்­வதன் மூலம் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கவோ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை நிறுத்­தவோ முடி­யாது. பேச்­சு­வார்த்­தைகள் மூலமே தீர்வு எட்­டப்­பட வேண்டும்.

ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட்டால் மியன்­மாரில் போன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களும் வன்­செ­யல்­களும் அதி­க­ரிக்­கலாம். நாட்டில் நல்­லி­ணக்­கமும் இன நல்­லு­றவும் இல்­லாமற் போகலாம்.பௌத்த மத­கு­ரு­வான ஞான­சார தேரர் சட்­டத்தை மதிக்க வேண்டும். சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­ன­தாகும்.

அவர் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்­சிக்­கக்­கூ­டாது. அவ்­வா­றான ஒரு நிலை ஏற்­பட்டால் அது அனைத்துச் சமூ­கத்­தையும் பாதிக்கும்.அர­சாங்கம் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முழு முயற்­சி­யுடன் செயற்­பட்டு வரும் சந்­தர்ப்­பத்தில் இந்த முயற்­சிக்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மே­யன்றி அதனைச் சீர்­கு­லைக்க முயற்­சிக்கக் கூடாது.

இன்றைய காலகட்டத்தில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதே சிறந்ததாகும் என்றார்.

No comments

Powered by Blogger.