Header Ads



முஸ்லிம்கள் அடங்கிப்போய் உள்ளனர், தவ்ஹீத் ஜமாஅத்தும் அமைதியாகி விட்டது..!

முன்னர் ஒரு முறை ஞானசார மிக மோசமாக அள்ளாஹ்வைப்பற்றி பேசிய போது அவரது பாணியில் அவரை ஏச ஒருவர் இருந்தார். அவர்தான் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளராக இருந்த அப்துல் ராசிக். ஆனால் அவர் ஞானசாரவை அவரது பாசையிலேயே  கிழி கிழி என கிழித்த போது கொழும்பைச்சேர்ந்த முஸ்லிம் சமூகத் துரோக அரசியல்வாதி ஒருவர் அப்துல் ராசிக் பற்றி பொலிசில் முறைப்பாடு செய்து அவரை உள்ளே தள்ளினார். அதனை உலமா கட்சி தவிர வேறு எந்தவொரு கட்சியுமோ இஸ்லாமிய அமைப்புக்களோ கண்டிக்க முன்வரவில்லை. அப்துர் ராசிக் பிணையில் வந்த போது நீதிமன்ற கட்டளையை ஏற்று அமைதியாக இருக்கின்றார். பட்டது போதும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் அமைதியாகி விட்டது. 

அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஆதரவாக இலங்கை முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்திருந்தால், தமது ஆதரவை பகிரங்கப்படுத்தியிருந்தால் அவரைத்தொடாந்து பலர் உருவாகியிருப்பர். இப்போது சிங்களம் தெரிந்த முஸ்லிம்கள் அடங்கிப்போய் உள்ளனர். இவற்றுக்கெதிராக சிங்களத்தில் பேச ஒரு ரோசமுள்ள முஸ்லிமும் தென்னிலங்கையில் இல்லை.  

“நீங்கள் எவ்வாறு தாக்கப்பட்டீர்களோ அவ்வாறே நீங்கள் தாக்குங்கள்” என இறைவன் கூறுகிறான். அவர்கள் நம்மை கேவலப்படுத்தினால் நாமும் அவர்களை கேவலப்படுத்தி பேசலாம் என்பதை இதன் மூலம் புரிகிறோம்.

அள்ளாஹ் அல்லாதவர்களை கடவுள்களாக நினைப்போரை நாமாக முதலில் ஏசக்கூடாது என்றே குர்ஆன் கட்டளையிடுகிறது. மாறாக அவர்கள் நம்மை ஏசினால் நாமும் ஏசலாம் என்பதை “நீங்கள் எவ்வாறு தாக்கப்பட்டீர்களோ அவ்வாறே நீங்கள் தாக்குங்கள்” வசனம் சொல்கிறது. 

இவ்வாறு எதிரும் புதிருமாக ஏச்சுக்கள் வரும் போதுதான் சிங்கள நடுநிலை கல்விச்சமூகம் இதில் தலையிட்டு யாரும் யாரையும் ஏசக்கூடாது என்று சொல்ல முன்வரும். அப்படியில்லாமல் இப்படி தொடர்ந்தும் கோழைகளாக இருந்தால் ஏச்சுக்கள் நிச்சயம் அடியாக மாறும் என எச்சரிக்கிறோம். 

-முஸ்லிம் உலமா கட்சி-

5 comments:

  1. தம்பி ராசாக்களா இப்பதெரியுதா எவன் காட்டிக்கொடுக்கின்றான் எவன் கூட்டிக்கொடுக்கின்றான் என்று?

    ReplyDelete
  2. ஆசாத் சாலி போன்ற பச்சோந்திகள் சமூகத்தில் இருக்கும் வரை இந்த சமூகத்துக்கு விடிவே இல்லை
    கூட்டு அமைப்புகளுக்கும் ஒரு முஸ்லிமுக்கு சதி செய்வது எப்படியென்று மட்டுமே தெரியும். நம் மக்களும் ஆமா சாமிகள்... சமூகம் கண் விழிக்காத வரை இதே கேடுதான்....!!!

    ReplyDelete

  3. “நீங்கள் எவ்வாறு தாக்கப்பட்டீர்களோ அவ்வாறே நீங்கள் தாக்குங்கள்” என இறைவன் கூறுகிறான். அவர்கள் நம்மை கேவலப்படுத்தினால் நாமும் அவர்களை கேவலப்படுத்தி பேசலாம் என்பதை இதன் மூலம் புரிகிறோம் abdul majeed sir pkease dont give wrong translation for quran .ypur also same like ghanasara exremist.pls be calm and pray and dua.may allah will help us

    ReplyDelete
  4. What do you want us to do? We should be vigilant in Gnanasara's matter. If we do as you say,just imagine what would happen to us. Mr. Majeed, we know who you are. Pls keep quiet. I will never call you a moulavi.

    ReplyDelete
  5. AVRGHAL UNGALUKKU THEEMAI SEITHAL
    AWARHALUKKU NALLATHA KHONDU ANUHUNGA
    IPPADITTHAN ALLAH QURAN LA SOLLI IRIKIRAAN MOUL MAJEED AWARHALE

    ReplyDelete

Powered by Blogger.