Header Ads



ஜனாதிபதியின் ஆதரவினைப் பெற்ற பொதுபல சேனா, ரோயல் பார்க்வரை தொடர்ந்த உறவு

ராஜகிரிய ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதி தற்போது பொலிசாரினால் முற்றுகையிடப்பட்டு, ஞானசார தேரரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

ரோயல் பார்க் தொகுதியில் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் இந்திக சமரவீரவுக்கு சொந்தமான வீடு ஒன்றும் அமைந்துள்ளது.

இவர் ஊடாகவே அண்மைக்காலங்களில் பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியை நெருங்கி தமக்குத் தேவையான ஆதரவினைப் பெற்றுக் கொண்டிருந்தாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

அத்துடன் டிலந்த விதானகே அடிக்கடி ரோயல் பார்க் வந்து ஜனாதிபதிக்கு நெருக்கமான இந்திக சமரவீர மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோருடன் நள்ளிரவு வரை ரகசிய கலந்தாலோசனைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

Powered by Blogger.