Header Ads



தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, நீரில் மூழ்கியது

தெற்கு அதிவேகப் பாதையின் மூன்று நுழைவாயில்கள் வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை தொடக்கம் மாத்தறையின் கொக்மாதுவை நுழைவாயில், களுத்துறையின் வெலிப்பென்ன நுழைவாயில் என்பன வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் வெள்ளி மாலை தொடக்கம் கடுவலை நுழைவாயில் பகுதியையும் வெள்ளம் மூழ்கடித்து, அதிவேகப் பாதைக்கு வாகனங்கள் உட்பிரவேசிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழிகள் ஊடாக அதிவேகப் பாதைக்கு உட்பிரவேசிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.