Header Ads



கடலுக்குள் குதிக்க மஹிந்த கட்டளையிட்டிருந்தால், மக்கள் குதித்திருப்பர் - ஹரீன்

காலி முகத்திடலில் ஒன்று கூடியது மஹிந்த வாதியினராகும். கடலுக்கு குதிக்க சொன்னாலும் கூட்டத்திற்கு வந்தோர் குதித்திருப்பர். காலி முகத்திடல் மக்கள் கூட்டத்தை நம்பி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீளவும் ஏமாற்றமடையவுள்ளார். இவ்வருடம் மாகாண மற்றும் உள்ளூராட்சி தேர்தல் நடக்கும். 

தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)

No comments

Powered by Blogger.