யாழ்ப்பாண முஸ்லிம் இளைஞர்களை, பொலிஸ் சேவையில் இணைய அழைப்பு
வடமாகாணத்தில் பொலிஸ் சேவையாற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் தற்போது 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஒருதொகை முஸ்லிம் இளைஞர்களும் வேலை வாய்ப்பற்று அல்லது உரிய வேலை கிடைக்காமல் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள யாழ்ப்பாண முஸ்லிம் இளைஞர்களுக்கு அரிய சந்தர்ப்பம் ஆகும்.
அத்துடன் பொலிஸ் சேவையில் இணைபவர்கள், அந்த மாவட்டத்திலேயே பணியாற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 45 ஆயிரம் ரூபாவிற்கு மேல் சம்பளம் கிடைக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கும், யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கும், யாழ்ப்பாண முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைவது பாதுகாப்பானதாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே யாழ்ப்பாண முஸ்லிம் இளைஞர்கள், பொலிஸ் சேவையில் இணைய முன்வருவதுடன், இதுவிடயத்தில் யாழ்ப்பாண முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆர்வமூட்டவும், வழிநடத்தவும் உரிய தரப்புகள் முன்வர வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சேவையில் இணைவது பற்றியதும், விண்ணப்பப் படிவங்களையும் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
Post a Comment