Header Ads



இலங்கையர்களை பேஸ்புக்கில் ஏமாற்றும் நைஜீரியர்கள்

முகநூலின் மூலம் காதல் வலை வீசி இளம் பெண்ணிடம் பணமோசடியில் ஈடுபட்ட நைஜீரிய பிரஜை கடும் எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்திய போது, 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நெல்சன் டென் என்ற குறித்த நபர் கொழும்பு - மாலபே பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் பதுளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முகநூலின் மூலம் காதல் செய்துள்ளார்.

இந்த பெண்ணிடமிருந்து 4,365,000 ரூபாவை பெற்றுக்கொண்டு அந்தப் பெண்ணுடன் முழுத் தொடர்பையும் துண்டித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நைஜீரியப்பிரஜை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.