Header Ads



எதிர்க்கட்சியில் இருந்த நிலை - ரணிலிடம் சுட்டிக்காட்டிய ஹரீன்

அமைச்சர்கள் தமது தொகுதிகளில் சுதந்திரமாக தமது மக்களுக்கு சேவை செய்யும் வகையில் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள், தமது தொகுதி மக்களுக்கு ஏதாவது பணிகளை செய்யவேண்டுமானால், மாகாண முதலமைச்சர்களிடம் செல்லவேண்டியுள்ளது.

இதன் காரணமாக ஊவா மாகாணசபையின் நிர்வாகத்தை கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துவருகிறது.

எனினும் திட்டத்தை முன் மொழிந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு நல்ல பெயர் இல்லாமல் போகிறது எனவும் கூறியுள்ளார்.

இது முன்னர் தாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது செயற்பட்டதை போன்ற நிலைமையை தோற்றுவித்துள்ளது என்றும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.