பொன்சேகாவுக்கு உயர் பதவி வழங்கினால், கட்சியில் இருந்து விலகுவேன் - விஜேதாச
அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவி வழங்கப்பட்டால் கட்சியில் இருந்து தான் விலகப் போவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
எவ்வித வாக்கு வங்கியும் இல்லாத, கடந்த பொதுத் தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகளை கூட பெறாத பொன்சேகாவுக்கு பதிலாக தேசிய பட்டியலில் ரோசி சேனாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்திருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 8ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடவுள்ளதுடன், இதன் போது சில பதவிகளுக்கான புதிய நியமனங்கள் செய்யப்படவுள்ளன.
Post a Comment