Header Ads



அல்­லாஹ்வின் பாதை என்று கூறிக்கொண்டு, முஸ்­லிம்கள் எமது காணி­களை ஆக்­கி­ர­மிக்­கி­றார்கள்

-ARA.Fareel-

இலங்­கையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் உச்­சத்தை எட்­டி­யுள்­ளது. சவூதி அரே­பியா இங்கு வஹா­பி­ஸத்தை போஷித்­துள்­ளது. அல்­லாஹ்வின் பாதை என்று கூறிக் கொண்டு முஸ்­லிம்கள் எமது காணி­களை ஆக்­கி­ர­மிக்­கி­றார்கள். தொல்­பொ­ருட்­களை அழிக்­கி­றார்கள். வனங்­களை அழிக்­கி­றார்கள். அர­சாங்கம் முஸ்­லிம்கள் மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இல்­லையேல் அவர்­களை சவூ­திக்கு ஏற்றி அனுப்­பி­விட வேண்டும் என பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் பயங்­க­ரத்தை நாம் கடந்த அர­சுக்கும் கூறினோம். இந்த அர­சுக்கும் கூறினோம். ஆனால் முஸ்­லிம்­களின் வாக்­கு­க­ளுக்கு ஏமாந்து அவர்­க­ளுக்கு எதிராக நட­வ­டிக்­கை­களை எடுக்­காதிருக்­கி­றார்கள். இது மீதொட்­ட­முல்லை குப்பை மேடு போன்ற பிரச்­சி­னை­யாகும். பந்­தினை கைமாற்றிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். சிறி­ய­தாக உரு­வான மீதொட்­ட­முல்லை குப்பை மேடு பூதா­க­ர­மா­கி­யதை நாம் கண்டோம்.

நாடு சுதந்­திரம் பெற்று 69 வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் சிங்­க­ள­வர்கள் நாட்டில் போர்­டிங்­கா­ரர்­க­ளாக, விடு­தி­களில் தங்­கி­யி­ருப்­ப­வர்கள் போலாகி விட்­டார்கள். நாட்டின் சொந்­தக்­கா­ரர்­க­ளாக முஸ்­லிம்கள் மாறி வரு­கி­றார்கள். எனவே பௌத்­தர்கள் நாம் நாட்டைப் பாது­காக்க முன்­வர வேண்டும்.

இந்­நாட்­டி­லுள்ள சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களும் சவூ­தி­யி­லி­ருந்து கிடைக்கும் நிதி உத­வி­க­ளுக்கு ஆசைப்­பட்டு வஹா­பி­ஸத்­துக்கு அடி­மை­யாகி வரு­கி­றார்கள். ஐ.ஐ.ஆர்.ஓ, ஐ.ஆர்.ஓ, அல் ஷபாப், முஸ்­லிமாத், ஹிரா, நிதா, செரண்டிப் போன்ற 10 அமைப்­புகள் இலங்­கையில் தீவி­ர­வா­தத்தைப் பரப்பி வரு­கின்­றன. ஹிரா அமைப்பின் தலை­மை­யகம் தெஹி­வ­ளையில் இருக்­கி­றது. இங்கு ஜமா­அத்தே இஸ்­லாமி மதம் மாற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளது
.
மலிக் அப்­துல்லா பல்­க­லைக்­க­ழகம்
ஹிரா பவுண்­டே­சனின் உத­வியில் 1500 கோடி ரூபா செலவில் கிழக்கில் ஓர் இஸ்­லா­மிய பல்­க­லைக்­க­ழகம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. சமூ­கத்­துக்கு வழி­காட்ட வேண்டும் என்று முஸ்­லிம்கள் இப்­பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைக்­கி­றார்கள். இங்கு அரபு மொழி போதிக்­கப்­ப­ட­வுள்­ளது. இஸ்­லா­மிய கலா­சாரம் போதிக்­கப்­ப­ட­வுள்­ளது. இப்­பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­காக முன்னாள் ஜனா­தி­பதி 500 ஏக்கர் காணி வழங்­கி­யுள்ளார். இங்கு இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களே உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளனர். இந்­நி­லையில் நாட்டில் நல்­லி­ணக்கம் ஒன்­றினை எதிர்­பார்க்க முடி­யுமா? 

சைட்டம் தனியார் மருத்­துவ பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து போராட்டம் நடத்­து­ப­வர்கள் ஏன் இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தை எதிர்க்­க­வில்லை.

மாணிக்­க­மடு விவ­காரம் 
மாணிக்­க­ம­டுவில் முஸ்­லிம்கள் 2 ½ ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்துக் கொண்­டுள்­ளார்கள். இது விகா­ரைக்குச் சொந்­த­மான காணி­யாகும். அவர்கள் அல்லாஹ் கூறி­யுள்­ளதைப் போன்று மாற்று மதத்­த­வர்­களின் காணி­களை அபக­ரித்­துள்­ளார்கள். இப்­போது எமக்கு மாற்றுக் காணி தாருங்கள் நாம் போகிறோம் என்­கி­றார்கள்.

முகுது விகாரை, ஏறாவூர் பகு­தி­க­ளிலும் இவ்­வாறே காணிகள் ஆக்­கி­ர­மிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளன. சிங்­க­ள­வர்­களும் வனப் பிர­தே­சங்­க­ளையும் ஏனை­ய­வர்­களின் காணி­க­ளையும் ஆக்­கி­ர­மித்துக் கொள்ள வேண்டும். பின்பு எமக்கு மாற்றுக் காணி தாருங்கள் போகிறோம் என்று சொல்ல வேண்டும் என்று சிங்கள மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். 

மஹாநாயக்க தேரரரை மாற்ற வேண்டும்
மஹாநாயக்க தேரர்கள் இறுதிக்காலம் வரை பதவியில் இருக்கக் கூடாது. மகாநாயக்க தேரர்கள் மத விடயங்களில் உறுதியாக இல்லாமையினாலேயே இன்று பௌத்தம் சவாலுக்குட்படுத்தப் பட்டுள்ளது.

எனவே மகாநாயக்க தேரர் பதவிக்காலம் 5 வருடங்களாக அமைய வேண்டும் என புத்தசாசன அமைச்சரைக் கோருகிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.