Header Ads



பிள்­ளை­களின் பசியை தீர்க்க, பலா மரத்தில் ஏறிய தந்­தை­ பலி

பிள்­ளை­களின் பசியை தீர்ப்­ப­தற்­காக பலா மரத்தில் ஏறிய தந்­தை­யொ­ருவர் தவறி விழுந்து பரி­தா­பகர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று நாவ­லப்­பிட்­டியில் இடம்­பெற்­றுள்­ளது. 

பிள்­ளைகள் பசி­யினால் வாடு­வதால் அவர்­க­ளுக்கு இரவு உண­வாக பலா சுளை­களை அவித்து கொடுக்கும் நோக்கில் பலா மரத்தில் ஏறிய  போதே  அதி­லி­ருந்து கீழே விழுந்து உயி­ரி­ழந்­துள்ளார்.

நாவ­லப்­பிட்டி, கெட்­ட­புலா தோட்­டத்தைச் சேர்ந்த 37 வய­தான எஸ்.பெரி­யப்பன் என்ற நபரே இவ்­வாறு பரி­தா­ப­க­ர­மாக உயிரி­ழந்­துள்ளார். 

பெருந்­தோட்டத் தொழி­லாளர் சமூ­கத்தைச் சேர்ந்த குறித்த நபர் கடு­மை­யான வறு­மையில் வாடி­யவர் எனவும், பலாக்காய் ஒன்றை பறித்து அதனை அவித்து இரவு உண­வாக்கிக் கொள்ளும் நோக்கில், 40 அடி உய­ர­மான பலா மரத்தில் ஏறிய போது தவறி விழுந்­துள்ளார் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

சம்­ப­வத்தில் காய­ம­டைந்­தவர் நாவ­லப்­பிட்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட போதும் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார். 

உடலின் உட்­பா­கங்­களில் ஏற்­பட்ட பலத்த காயங்­க­ளினால் மரணம் ஏற்­பட்­டுள்­ளது என கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.