யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு பாராட்டு
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை கடலில் மீட்கப்பட்ட மியன்மார் முஸ்லிம்களுக்கு உடனடி உதவிகளை வழங்கி, ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கவுன்சில் நன்றியைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்ததாவது,
கடலில் மீட்டகப்பட்ட மியன்மார் முஸ்லிம்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவது குறித்து, முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இதில் அரசியல் தலையீடுகள் அவசியமற்றது. எனவே இங்கு நிதானமான செயற்பாடு பிரதானமானது.
அதேவேளை கடலில் மீட்கப்பட்ட மியன்மார் முஸ்லிம்களுக்கு உடனடி உதவிகளை வழங்கிய யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். இது ஏனைய பிரதேச முஸ்லிம்களுக்கு முன்மாதிரியான நடவடிக்கை . இது பாராட்டத்தக்கது என்றார்.
Post a Comment