ஞானசார தேரர் எங்கே..?
(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள, ஆசிரியர் தலையங்கம்)
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்காக நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் கடந்த 25.05.2017 அன்று வெளியிட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்கு-லைக்க முயற்சித்தமை, வாக்குமூலம் பெறுவதற்காக பொலிசார் விடுத்த அழைப்பை புறக்கணித்தமை உள்-ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழேயே தேரரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
எனினும் இவ்வாறு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 7 நாட்களாகின்ற போதிலும் ஞானசார தேரரை பொலிசார் கைது செய்யவில்லை.
தமது அமைப்பின் செயலாளரான குறித்த தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் அவ்வமைப்பு அறிவித்திருந்தது.
இருப்பினும் ஞானசார தேரர் தற்போது பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் முகநூல் மூலமாக சில தினங்களுக்கு முன்னர் ஒலிப்பதிவொன்றை அவர் வெளியிட்டுள்ளார். மேலும் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில வார இதழொன்றுக்கு பேட்டி ஒன்றையும் வழங்கியுள்ளார்.
அப்படியானால் ஞானசார தேரர் எங்கிருக்கிறார் என்பதை இன்னுமா பொலிசார் அறியாமலிருக்கிறார்கள்? நியமிக்கப்பட்ட நான்கு விசேட பொலிஸ் குழுக்களும் இன்னமுமா தமது தேடுதல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? அல்லது இவர்கள் அனைவரினாலும் கண்டுபிடிக்க முடியாத மறைவிடத்திலா ஞானசார தேரர் இருந்து கொண்டிருக்கிறார்?
ஞானசார தேரரை அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் ஒரு சிலரே பாதுகாத்து வைத்துள்ளதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அப்படியானால் இந்த அமைச்சர்களின் அழுத்தங்களால்தானா தேரர் இன்னும் கைது செய்யப்படாமலுள்ளார்? இந்தக் கேள்விகளுக்கு விடை தரப்போவது யார்?
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேரர் கடந்த 24ஆம் திகதி ஆஜராகவில்லை. காய்ச்சல் என இதற்கு காரணம் சொல்லப்பட்டது. இன்றைய தினம் குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் அவர் ஆஜராவாரா இன்றேல் காரணம் சொல்லித் தப்பிக்க முனைவாரா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இப்போது சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எழுப்புகின்ற கேள்வி, ஞானசார தேரர் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டவரா அல்லது அப்பாற்பட்டவரா என்பதேயாகும். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது அரசாங்கத்தினதும் நீதியமைச்சரினதும் கடப்பாடாகும்.
நாட்டில் அனர்த்த சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்காக ஞானசார தேரரின் விடயத்தை கிடப்பில் போடவோ, மறக்கடிக்கச் செய்யவோ முனையக் கூடாது.
அவரது செயற்பாடுகள் தொடர இடமளிக்கப்படுமாயின் அதுவே மற்றுமொரு அனர்த்தத்திற்கு வழிவகுக்கும்.
எனவேதான் பொலிசார் வாக்குறுதியளித்தபடி ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
ஞானசாரர் அரசின் பாதுகாப்புடன் மிகப்பாதுகாப்பாக இருப்பார்.அவரைச் சட்டம்
ReplyDeleteஒன்றும் செய்துவிடாது.UNPயும் 'பீ' தான் SLFPயுன் 'பீ' தான்!
இதுதான் மைத்திரி + ரணில் அவர்களின் நல்லாட்சி. இந்த ஒருத்தனுக்கே நீதியை நிலைநாட்டமுடியாத நல்லாட்சியா சமூகங்களின் பிரச்னையை தீர்க்கபோகுது.
ReplyDeleteநாட்டில் காட்டாட்சி நடத்தும் ஒருவனௌ கைது செய்ய முடியாத அரசாங்கம் மக்களுக்கு எதற்காக,சுயாதீன நீதிமன்றம்,சுயாதீன போலிஸ் எங்கே தேர்தலில் கூவினார்கள் சுயாதீன போலிஸ் ஏன் அரசியல் வாதிகளுக்கு அடிபணிய வேண்டும் சுயாதீனமாக இயங்க முடியவில்லையா?
ReplyDeleteThe government has to do all the needs& support for not only Gnasara thero but also anybody who want to eliminate the islamic terrorism & Jihad
ReplyDeleteThere's no Islamic terrors in the world, but there are many terror groups under the disguise of Arabic names, like pottu amman, Karuna Amman. All fake names.
ReplyDeletedid you check gnanasera at my3's presidential house or at his own house?, at ranil's alari house or sathsiripaya?, at champika's ministry or at home? vijayathaasa rajapaksha's home or ministry?, IPG's home or at office? if not... then you could also check mahintha's home or kothapaya's home! sometimes... he may be hidden at chief justice's home as requested by leaders. everyone is against muslims and acting with different characters.
ReplyDelete