Header Ads



போதைப் பொருள் கடத்திய புறா கைப்பற்றப்பட்டது


போதைப்பொருட்களை கடத்திச் சென்ற புறா ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

ஈராக்கிய எல்லைக்கு அருகிலுள்ள குவைத்திய சுங்கத் திணைக்கள கட்டடம் ஒன்றுக்கு அருகில் மேற்படி புறா கண்டுபிடிக்கப்பட்டதாக குவைத் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அப்புறாவின் முதுகில், போதைப் பொருளான 178 குளிசைகள் அடங்கிய பொதியொன்று கட்டப்பட்டிருந்தது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புறாக்களின் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக குவைத் சுங்க அதிகாரிகள் அறிந்திருந்தனர் எனவும், ஆனால், போதைப் பொருள் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் புறா ஒன்று போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.