Header Ads



பாவம் அவர்கள் பச்சைக் குழந்தைகள், விட்டுவிடுங்கள் ஞானசாரரே


ஞானசார தேரரே!
நான் உங்களைக் கேட்கிறேன்.
ஏன் எங்கள் தலைவர்களை
ஏசி நீங்கள் தூஷிக்கிறீர்கள்?
------------------------
அப்பாவிகள் அவர்கள் 
யாதும் அறியாத குழந்தைகள்
பாவம் அவர்கள் மீது
பழிகள் சுமத்தி விடாதீர்கள்…!
------------------------
பாசமிகு எங்கள் தலைவர்களை
நேசிக்க வேண்டிய நீங்களே
தூஷிப்பது என்ன நியாயம்? 
------------------------
நீங்கள் அநியாயம் செய்யும் 
போதெல்லாம் அவர்கள்
நியாயம்தானே பேணுகிறார்கள்
நிதர்சனங்களைச் சற்று 
நினைத்துப் பாருங்கள்…!
------------------------
அளுத்கமையில் ஆடினீர்கள்
தம்புள்ளையில் தாண்டவம் புரிந்தீர்கள்
ஆனால்… 
எங்கள் தலைவர்கள் 
உங்களுக்கு எதிராக
எதனையும் செய்யாத போது
ஏன் அவர்களைத் தூஷிக்கிறீர்கள்..?
------------------------
பள்ளிகளை உடைத்தீர்கள் 
பல கடைகளை காலி செய்தீர்கள்
உயிர்களைப் பறித்தீர்கள் ஆனால்
உங்களுக்கு எதிராக 
எங்கள் தலைவர்கள்
எதுவுமே செய்யாத போது
ஏன் அவர்களை தூற்றுகிறீர்கள்..
------------------------
பாவம் அவர்கள் 
பச்சைக் குழந்தைகள்
விட்டு விடுங்கள் தேரரே
------------------------
உங்கள் காட்டுத் தர்பார்கள்
கடைக்கு வரும் போதெல்லாம் 
எங்கள் மோட்டு தலைவர்கள்
ஏதோ காட்டமாய், கனதியாய் 
அறிக்கை விட்டு
காரியம் எல்லாம்
கச்சிதமாக முடிந்தது போல் 
எழுந்து நிற்பார்கள்…!
------------------------ 
இடுப்பு வலிக்கு 
இஞ்சி போட்ட தேநீர் குடித்தால்
கடுப்புக் குறையும் எனக் கூறும்
கை வைத்தியக்கார்கள்தான்
எங்கள் முஸ்லிம் தலைமைகள்
அது எங்கள் தலையெழுத்து!
------------------------
விகாரை கட்டி நீங்கள்
விரும்பிய இடங்களில் 
சிலைகள் வைத்தாலும் 
எங்கள் துரைமார்களால் 
எந்தச் சிக்கலும் இல்லை! 
ஏனெனில் அவர்களும்
வெறும் சிலைகள்தான்! 
------------------------ 
ஒன்று மட்டும் உண்மை..
உங்களின் அடாவடிகளால்
எங்கள் தலைவர்கள் சிலரின்
ஆகாதா தனங்களைச்
சமூகம் உணர 
அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
------------------------
உங்களுக்காக அவர்கள்
அவர்களுக்காக நீங்கள்
ஞானம் புரிகிறதா
ஞானசாரரே!

-கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

6 comments:

  1. அழகாக விளக்கி இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  2. கவிதையில் எமது தலைவர்களின் தலைகளை சீவி விட்டீர்கள்............ சபாஷ்....................

    ReplyDelete
  3. May Allah bless this poet..it is really good lesson for inneptitute Muslim poltical leadership..
    Vivid description of our pathetic situation...had they resigned 21 of them in protest for this thug monks what they will lose nothing Singhalese poltical leadership would have learned lesson ..look Tamil politicians did not get any ministerial post to show the world injustice has been done to them ..
    Pleas3 do not stop with this poem but make some true drama based on this point to educate public about these useless Muslim politicians
    They enjoy life while community is burning
    While mosques are burned down ..
    While we face a life and death threats

    ReplyDelete
  4. Muslim M.P.kkalukku muthukelumpu irukkutha enru thadavipparpoma nanparkaley.

    ReplyDelete

Powered by Blogger.