Header Ads



மக்கள் வெள்ளத்தை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சியதனாலேயே, மஹிந்தவின் பாதுகாப்பை குறைத்துள்ளனர்

(எம்.சி.நஜிமுதீன்)

காலிமுகத்திடலில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய மே தினக்கூட்டம் எதிர்பார்த்ததை விட பெரு வெற்றியீட்டியிருந்தது. அங்கு கூடிய மக்கள் வெள்ளத்தை கண்டு ஆட்சியாளர்கள் அஞ்சியதனாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்துள்ளனர். எனவே அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் நாட்டு மக்களும் மதத்தலைவர்களும் மிகுந்த அவதானம் செலுத்தி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்னாயக்கா தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பத்தரமுல்லையிலுள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.