Header Ads



மோடியின் இலங்கை விஜயத்தை, கண்காணிக்க வேண்டும் - ஞானசார

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறுவதற்கு இடமளிக்க முடியாது என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்  அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெசாக் பௌர்ணமி அலங்காரம் என்ற போர்வையில் அரசாங்கம் இந்திய காலணியாக இலங்கையை மாறச் செய்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள மத மறுமலர்ச்சி திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எதிர்கால அனர்த்தங்களுக்கான ஓர் முன் எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் திட்டமிட்ட ஓர் செயலா என கண்காணிக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

No comments

Powered by Blogger.