Header Ads



டெங்கு காய்ச்சலினால், பாத்திமா ஸஹா மரணம்

காத்தான்குடியில் டெங்கு காய்ச்சலினால் சிறுமியொருவர் நேற்று மாலை உயிரிழந்தள்ளார் என காத்தான்குடி சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 13 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காத்தான்குடி 3 ஆம் குறிச்சி பழைய விதானையார் வீதியை சேர்ந்த 12 வயதுடைய ஏ.பாத்திமா ஸஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்த சிறுமி காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்று வந்துள்ளார்.
மேலும், காத்தான்குடியில் இதுவரை டெங்கு காய்ச்சலினால் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.