Header Ads



ஜனாதிபதி + அலரி மாளிகையை முற்றுகையிடுவோம் - ரணில், மைத்திரியை துரத்தியடிப்போம்

இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையை முற்றுகையிடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

காலி முகத்திடலில் நேற்று இடம் பெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

2020ஆம் ஆண்டு வரை பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது. அதற்கு முன்னர் நாம் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டில் காட்டிக் கொடுப்புகள் நிகழ்ந்து வருகின்றது. ஒரு முறை விடுதலைப்புலிகள் கொழும்பை தாக்க திட்டமிட்டனர்.

அதற்காக மீன் வண்டி ஒன்றில் குண்டுகளைக் கொண்டு வந்தனர். அதனைக் கண்டு பிடித்த புலனாய்வுத்துறை அதிகாரி இன்று சிறைச்சாலையில் இருக்கின்றார்.

அன்று அவர் குண்டுகளைக் கண்டு பிடிக்காவிட்டால் கொழும்பு இருந்திருக்காது. ஆனால் இன்று அவர் விடுதலைப் புலிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இப்படியாக தொடர்ந்து முறைகேடாக ஆட்சி நடத்திக் கொண்டு வரும் அரசுக்கு எதிராக நாம் திருப்பித் தாக்க வேண்டும். முடிந்த அளவு பலம் கொண்டு தாக்க வேண்டும்.

அதற்கு இப்போது மக்கள் எழுச்சியே ஆயுதமாகும் அதனைக் கொண்டு இந்த முறையற்ற ஆட்சியை அடக்க வேண்டும்.

அதேபோல் நாட்டை பிரித்து சர்வதேசத்திற்கு ஏற்றால் போல் தனி ஈழம் அமைத்துக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது.

அதற்காக புதிய அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பார்க்கின்றார்கள்.

அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றாக சேர்ந்து ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையை கைப்பற்றுவார்கள்.

அப்போது இராணுவத்தை கொண்டோ அல்லது பொலிஸாரின் ஆயுத அடக்குமுறை கொண்டே மக்கள் எழுச்சியை தடுக்க முடியாது.

ரணிலையும், மைத்திரியையும் துரத்தியடிப்போம். காட்டிக்கொடுத்து, நாட்டை பிளவு படுத்தி, நாட்டின் சொத்துக்களை விற்றுக் கொண்டு இருக்கும் இந்த ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும் எனவும் விமல் தெரிவித்தார்.

2 comments:

  1. You supported the arrest of Fonseka, who was leading the North war.. Is it not an injustice you people did to a war hero and Then you brought KARUNA on redcarpet.. is not that you treated a LTTE member with flower?

    Lucky the tong is not having any bones... that makes you speak of what the shame you did to fonseka and Karuana

    ReplyDelete
  2. உங்களுக்கெள்லாம் பொன்சேக்கா பொறுப்பெடுத்தால்தான் சரி

    ReplyDelete

Powered by Blogger.