Header Ads



வென்னப்புவயில் முஸ்லிம் வர்த்தகரின் கடை, தீயில் பொசுங்கியது இனவாத சதியா..?

வென்னப்புவ, மாரவில, தெமட்டபிட்டிய சந்திப் பிரதேசத்தில் உள்ள மின் உபகரணங்களை விற்பனை செய்யும் .முஸ்லிம் வர்த்தகரின் கடை தீயில் பொசுங்கிப் போயுள்ளது.

இதுபற்றிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கடைக்கருகில் இருந்து மீட்கப்பட்டபொருட்களை நோக்குகையில் அவை சதி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டவையா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

அதேவேளை அண்மைய காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக தினமும் ஒவ்வொரு இனவாதச் சம்பங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

05 மாடிகளைக் கொண்ட குறித்த வர்த்தக நிலையத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து மாரவில பொலிஸார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு நகரசபை தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயினால் உயிர் சேதங்கள் எதுவம் ஏற்படவில்லை என்பதுடன், ஏற்பட்ட சொத்து சேத விபரங்கள் இதுவரை கணக்கிடப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.