Header Ads



ட்ரம்புடன் உயர்மட்டப் பேச்சில், ஈடுபடவுள்ள ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர் வரும் 28 ஆம் நாள் அமெரிக்கா செல்லும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர், அங்கு பிரதமர் மேற்கொள்ளவுள்ள முதலாவது பயணம் இதுவாகும்.

No comments

Powered by Blogger.