Header Ads



சந்திரிக்காவின் கணவனை, களவெடுத்த மகிந்த

கூட்டு எதிரணியின் மே நாள் பேரணி நடைபெற்ற காலி முகத்திடல் பகுதியில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரணதுங்கவின் உருவப் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி நேற்று காலிமுகத்திடலில் நேற்று பிரமாண்டமான மே நாள் பேரணியை நடத்தியிருந்தது.

இந்தக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவின் உருவப்படங்களுடன், சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரணதுங்கவின் படங்களும் அருகருகாக வைக்கப்பட்டிருந்தன.

சந்திரிகா குமாரதுங்கவை தீவிரமாக விமர்சித்து வரும் மகிந்த ராஜபக்ச, அவரது கணவரான, முன்னாள் நடிகரும், சிறிலங்கா மக்கள் கட்சியின் நிறுவுனருமான படுகொலை செய்யப்பட்ட விஜயகுமாரணதுங்கவின் படங்களை தமது அரசியல் நலனுக்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.