Header Ads



அரசுக்கு விரோதமாக துணிச்சலாக கருத்துக்களை வெளியிட்ட, ரிவிர பத்திரிகைக்கு சீல்

ராஜபக்ச குடும்பத்தினரின் பங்கு முதலீட்டில் இயங்கி வந்த ரிவிர சிங்களப் பத்திரிகையின் அலுவலகம் இன்று -22- பொலிசாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பத்திரிகைகளில் அண்மைக்காலமாக அரசாங்கத்துக்கு விரோதமான கருத்துக்களை துணிச்சலாக வெளியிடும் போக்கு ரிவிர பத்திரிகை நிர்வாகத்திடம் காணப்பட்டது.

இவர்களின் செய்திகள் குறித்து சில சமயங்களில் அமைச்சர்கள் காரசாரமாக பதில் கருத்து தெரிவிக்கும் நிலையும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் மருதானையில் அமைந்துள்ள ரிவிர பத்திரிகை அலுவலகம் இயங்கி வந்த கட்டிடம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் இடைக்காலத் தீர்ப்பின் பிரகாரம் ரிவிர அலுவலக கட்டிடம் இன்று பொலிசாரினால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

எனினும் பத்திரிகை அலுவலகத்தின் பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றிக் கொள்ள பொலிசார் அனுமதியளித்துள்ளனர்.

அதன் பின்னரே அலுவலக கட்டிடம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.