Header Ads



கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியையின் வாயை பொத்தி, நகைகளை கொள்ளையிட்ட நபர்

கிரிபாவ கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்குள் நேற்று முன்தினம் பகல் அனுமதியின்றி நுழைந்த நபர் ஒருவர் ஆசிரியையை அச்சுறுத்தி தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.

ஆரம்பப் பாடசாலையின் முதலாம் ஆண்டு வகுப்பில் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியையிடமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 16 ஆம் திகதி சைக்கிளில் வந்த இந்த நபர் ஆசிரியை கற்பித்துக் கொண்டிருந்த வகுப்பறைக்குள் நுழைந்து ஆசிரியையின் வாயை கைக்குட்டையால் மூடியுள்ளார்.

பின்னர் அவர் அணிந்திருந்த மோதிரங்கள் இரண்டையும் கழற்றிக் கொண்டு கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துள்ளார்.

வகுப்பு பிள்ளைகள் கூச்சலிட்டதை அடுத்து ஏனைய வகுப்பறைகளில் கற்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர்கள் அந்த வகுப்பறைக்கு வந்தபோது ஒரு ஆசிரியருக்கு கத்தியைக் காண்பித்து குத்துவதாக அச்சுறுத்தி தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை. கிரிபாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.