Header Ads



நீர்கொழும்பை அச்சுறுத்தும் டெங்கு

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய் பரவிவருகின்ற நிலையில், நீர்கொழும்பில் அதிகளவில் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு – தளுபத்தை, பெரியமுல்லை, கட்டுவை, தளுவகொட்டுவை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் துரிதமாகப் பரவி வருகின்றது.

நீர்கொழும்பில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 536 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக நீர்கொழும்பு பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் 6 வயது சிறுமி உட்பட 4 நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருகின்றமையினால், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக நோயாளர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.