Header Ads



திங்கட்கிழமை காலை, அமைச்சரவை மாற்றம் உறுதியானது

அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாகவும், நாளை -22- காலை அமைச்சரவை மாற்றம் உறுதி என்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இரவு நடந்தது.

இதன் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஊடகத்துறை அமைச்சர், நாளை காலை அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும். என்னுடைய அமைச்சிலும் மாற்றம் ஏற்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முக்கிய அமைச்சுக்கள் நாளை கைமாறலாம் என்றும், இதில் ஜனாதிபதியினதும், பிரதமரினதும் நேரடி கவனத்தில் நடக்கும் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

இதேவேளை, இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள யார் யாருக்கு எந்தெந்த அமைச்சுப் பதவி போகும் என்பது குறிதது எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை.

1 comment:

  1. Will our fellows speak up for injustice after confirming their portfolio, at least?

    ReplyDelete

Powered by Blogger.