Header Ads



அமைச்சரவை மாற்றம் குறித்து மஹிந்த..!

இன்று -22- இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

சிலாபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியாலாளர்கள் எழுப்பியகேளவிகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் மாற்றம் செய்வது என்பது சாதாரணமாக ஜனாதிபதிக்கு உள்ள உரிமையாகும்.ஆனால், இன்று ஜனாதிபதிக்கு அதனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில்,பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அதிகாரத்தைப் பயன்படுத்தும் பிரதமர், ஜனாதிபதி என்ற இரண்டு பேர் இருக்கும்போது,நாட்டுக்கு வேலை செய்ய முடியாது.

இவ்வாறு சென்றால், நாட்டின் நிலைமை மோசமாகும். அதுதான் எமது கவலை என மஹிந்தராஜபக்ச கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.