Header Ads



"உதவுங்கள்" சர்வதேச சமூகத்திடம் இலங்கை வேண்டுகோள்

பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு உதவ முன்வருமாறு ஐ.நா, அனைத்துலக தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு மற்றும் அயல்நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ முன்வருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று இந்த அவசர வேண்டுகோளை சர்வசே சமூகத்திடம் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான தேடுதல், மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ளும் வகையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அவசர நிலைமைகளைச் சமாளிக்கும் அலகு ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

சிறிலங்காவின் அவசர வேண்டுகோளை ஏற்று இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்று உதவிப்பொருட்களுடன் இன்று கொழும்பு வரவுள்ளது. மற்றொருகப்பல் நாளை கொழும்பு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.