பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களுக்கு, பிரித்தானியா கண்டனம்
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு பிரித்தானியா இன்று -22- கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேமஸ் டயூரிஸ், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இது போன்ற தாக்குதல்கள் அனைத்து சமூகங்களும் கண்டனம் செய்ய வேண்டும். மத வெறுப்புகளைத் தூண்டிவிடுபவர்கள் இதனை பொறுப்பேற்றுக் கொள்வார் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment