Header Ads



குப்பையில் இருந்து மூன்றரை கோடி ரூபா, பெறுமதியான ஹெரோயின் மீட்பு

கொழும்பு கோட்டை டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் 3.5 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் குப்பையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மருதானை பொலிஸார் இன்று இந்த ஹெரோயின் தொகையை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி கூறியுள்ளார்.

இதன் பெறுமதி மூன்றரை கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருதானை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.