Header Ads



பிரபாகரனின் மரணத்திற்கு சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம்

புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களான சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்களே காரணம் என பா.ஜ.க வின் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த கட்சியில் மூன்று ஆண்டுகால சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளின் தலைவரை அந்த ஆயுதத்தை கீழே போட விடாது சீமான், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டவர்கள் உணர்ச்சிவசப்பட வைத்து மரணிக்க செய்துள்ளார்கள்.

நன்றாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இறுதி வரை சமாதானம் பேசவிடாது அவர் மரணிப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேச்சை கேட்பதில்லை, இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதனால் ஈழ தமிழர்களே பாதிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.