Header Ads



ஜும்ஆப் பள்ளிவாசலில் உண்டியல், உடைக்கப்பட்டு பணம் திருட்டு

ஏறாவூர் முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாகவும், உண்டியலில் இருந்த ஒரு தொகைப் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பள்ளிவாசல் புனரமைப்பு மற்றும் நிருவாகப் பணிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் உள்ள பணமே இவ்வாறு திருட்டுப்போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தவர்களே இந்த விடயம் தொடர்பில் நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.