விமல் வீரவன்சவின் மிருகக் கொள்கை - போட்டுதாக்கும் மஹிந்த அமரவீர
ஒரு மனிதன் மிருகமாவதும் பிராமணனாவதும் பிறப்பால் அல்ல அவனது கொள்கைகளால் ஆகும். எனவே புண்ணியமான போயா தினத்தில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவது விமல் வீரவன்சவின் மிருகக் கொள்கைகளையே வெளிப்படுத்துகின்றது எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறானவர்கள் ஊடகங்களின் முன்னிலையில் தேசப்பற்றாளர்களாக நடிக்கின்றார்கள் என்றும் சாடியுள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில்
முழு உலகமே பௌத்த தர்மத்தை நினைவு கூரும் தினமே வெசாக் தினமாகும். அனைத்து போயாக்களையும் விட வெசாக் போயா புனிதமானது.
அவ்வாறானதொரு புண்ணிய தினத்தில் கறுப்புக் கொடிகளை பறக்க விடுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்ததன் மூலம் விமல் வீரவன்ச எம். பி. பௌத்த தர்மத்தை அவமதித்துள்ளார்.
ஆனால் இவர்கள் ஊடகங்களின் முன்னிலையில் தேசப்பற்றாளர்களாகவும், பௌத்த தர்மத்தின் பாதுகாவலர்களாகவுமே நடிக்கின்றனர். ஒரு மனிதன் மிருகமாவதும் பிராமணனாவதும் பிறப்பால் அல்ல அவனது கொள்கைகளாலே ஆகும்.
எனவே வரலாற்றில் எவரும் கூறாத கருத்தை விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்துள்ளார். இது பௌத்த தர்மத்தையே அகௌரவப்படுத்தும் செயலாகும். எனவே இது மிருகத்தனமான கொள்கையாகும் என்றார்.
Post a Comment