Header Ads



கோர விபத்து, ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வர் பலி

பொலன்னறுவை - பிந்திவெவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்று பஸ் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நால்வரும் பலியாகியுள்ளனர்.

ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 23 - 47 வயதுக்குற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.