மீதொட்டமுல்லயில் மீண்டும் அபாயம் - மக்களை வெளியேற்ற நடவடிக்கை
மீதொட்டமுல்ல குப்பை மேடு பகுதியில் மீண்டும் அனர்த்தம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக மற்று நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவும் உரிய மக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீண்டும் எச்சரித்துள்ளது. கண்டி - கொஹாகொட குப்பை மேடு அபாயம் உள்ள நிலையில் தொடர்ச்சியாக ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகும் குறிப்பிட்டது.
மீதொட்டமுல்ல குப்பை மேடு அதிக கனம் காரணமாக அண்மையில் அனர்த்தம் ஒன்றை எதிர்கொண்ட நிலையில் குறித்த அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது. இந்நிலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment