Header Ads



சம்மாந்துறையில் 9 வயது, தாலிக் அஹமட் மர்ம மரணம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

சம்மாந்துறை ஏழாம் பிரிவைச் சேர்ந்த அப்துஸ் ஸலாம் தாலிக் அஹமட் எனும் நான்காம் வகுப்பில் கல்வி பயில்கின்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

நேற்று (9) பிற்பகல் வேளையில் வீட்டின் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த சிறுவனின் தாய், பூட்டிய நிலையில் இருந்த படுக்கையறையை திறந்த போது மகன் உயிரிழந்தது போன்ற நிலையில் கிடைப்பதைக் கண்டு, வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

வைத்திய பரிசோதனையின்போது சிறுவன் உயிரிழந்திருப்பதை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.