Header Ads



ஊசி மூல­மாக வெளி­நாட்­ட­வர், நோய்­ பரப்புவதாக வதந்தி - 3 வெளிநாட்டினர் மீது தாக்குதல்

மலை­யக பிர­தே­சங்­களில் ஊசி மருந்­துகள் மூல­மாக தொற்று நோய்­களை வெளி­நாட்­ட­வர்கள் பரவ செய்­கின்­றனர் என்ற வதந்தி சில மாதங்­க­ளாக பர­வு­கி­றது.

இந்­நி­லையில்  ஹப்­புத்­தளை, பிட்­ரத்­மலை பகு­தியில் ஊசி மருந்து ஏற்ற வந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் சைக்­கிளில் பய­ணித்த மூன்று வெளி­நாட்­ட­வர்கள் தாக்­கப்­பட்­டுள்ள சம்­பவம் இடம்­பெற்­றள்­ளது. 

சம்­பவம் பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஹப்­புத்­தளை, பிட்­ரத்­மலை பகு­தியில் தேவா­லயம் ஒன்றில் பூஜைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த சமயம் அப்­ப­குதி ஊடாக வெளி­நாட்டு பிர­ஜைகள் மூவர் சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்த போது அவர்­களில் ஒருவர் தனது சைக்கிள் டயர்­க­ளுக்கு காற்று நிரப்பும் உப­க­ர­ணங்­களை தனது பையில் இருந்து எடுத்­துள்ளார்.  

இதனால் சந்­தேகம் கொண்ட பிர­தே­ச­வா­சிகள் பல்­வேறு கேள்­வி­களைக் கேட்க அவர்­களும் எதிர்த்து பதில் கூற பிர­தே­சத்தில் பதட்ட நிலை ஏற்­பட்­டுள்­ளது. உட­னேயே வெளி­நாட்டு பிரஜைகள் மூவரும் குறித்த இடத்­தி­லி­ருந்து விலகிச் சென்­றுள்­ளனர்.

இருந்தும் அவர்­களின் நட­வ­டிக்­கையில் சந்­தேகம் கொண்ட பிர­தே­ச­வா­சிகள் அவர்­க­ளுடன் வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­ட­துடன் தாக்­கு­தலும் நடத்­தி­யுள்­ளனர். இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­துக்கு வந்த பொலிஸார் இங்­கி­லாந்து நாட்டு வீரர் ஒரு­வ­ரையும் நேபாள நாட்டு வீரர் ஒரு­வ­ரையும் பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்துச் சென்று விசா­ர­ணை­களை மேற் ­கொள்­வ­துடன் பிர­தே­ச­வா­சிகள் தொடர்­பிலும் நட­வ­டிக்கை மேற்­கொண்­டனர்.

இதே­வேளை, தாக்­கு­த­லுக்கு உள்­ளான வெளி­நாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்கள் மூவரும் தியத்­த­லாவை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்ட  நிலையில் பிட்­ரத்­மலை தோட்­டத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்­பட்­ட­வர்கள் விசா­ர­ணைக்­காக பொலிஸார் ஹப்­புத்­தளை பொலிஸ் நிலை­யத்­துக்கு  அழைத்து சென்­றுள்­ளனர். 

ஹப்­புத்­தளை, பண்­டா­ர­வளை,  திய­த­லாவை ஆகிய பொலிஸ் நிலை­யங்­களின் பொலிஸார் கூட்­டாகச் சேர்ந்து மேற்­படி சம்­பவம் தொடர்­பாக விசேட விசா­ரணை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றனர்.

தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை எதிர்­வரும் தினங்­களில் கைது செய்து பாதிப்­ப­டைந்­த­வர்­க­ளுக்கு உரிய தீர்வை பெற்­று­கொ­டுப்­ப­துடன் வெளிநாட்டு பிரஜைகளின் காணாமல் போன சைக்கிள் மற்றும் பெறுமதியான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இச்சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.